தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மாணவர்கள் குழப்பம்!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது நடக்கும் இரண்டாவது திருப்புதல் தேர்வுகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு எண்ணை பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமோ என்கிற குழப்பம் எழுந்துள்ளது.
திருப்புதல் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக மே 5ம் தேதி நடக்க இருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வாட்ஸ் ஆப் செயலி மூலம் ஆசிரியர்கள் வழங்கும் அலகு தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
வீட்டிலிருந்தே கொரோனா தொற்று பரிசோதனை – ஐசிஎம்ஆர் அனுமதி!!
முதல் திருப்புதல் தேர்வுகள் முன்னதாக நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் அலகு தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. ஆசிரியர்கள் அனுப்பும் வினாக்களுக்கு மாணவர்கள் வீட்டில் புத்தகத்தை பார்த்து எழுதி விடை அனுப்புகின்றனர் என்ற புகார்களும் எழுந்துள்ளது. மேலும், இந்த தேர்வில் மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் பொதுத்தேர்வுக்கு வழங்கியுள்ள தேர்வு எண்ணை பதிவு செய்யுமாறும் பள்ளிகள் கூறியுள்ளதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து வாட்ஸ் ஆப்பில் அறிவுரைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இரண்டாவது திருப்புதல் தேர்வின் விடைத்தாளை வாட்ஸ் ஆப்பில் அனுப்ப முடியாத மாணவர்களிடம் நேரில் சென்று விடைத்தாளை பெற்று திருத்தம் செய்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Yella job ku entrance exam yiruku aproh yedhuku 12 th mark.all pass la Venda engaluku . online exam vainga, apdi yillana revision marks podunga.na yippo 12 th I affected by Corona .I can’t attend offline exam😔