அக்.19ம் தேதி 1 முதல் 8 & 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
அக்.19ம் தேதி 1 முதல் 8 & 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
அக்.19ம் தேதி 1 முதல் 8 & 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
அக்.19ம் தேதி 1 முதல் 8 & 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து விதமான பள்ளிகளிலும் முறையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 1 லிருந்து 11 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

மாநிலம் முழுவதும் தற்போதுள்ள கொரோனா தொற்று சூழலை ஆய்வு செய்த அரசு, 1 முதல் 8 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகளை வரும் அக்டோபர் 19ம் தேதி முதல் மீண்டுமாக திறக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ‘அசாம் மாநிலத்தில் பட்டப்படிப்பு கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகள் மற்றும் பிற பல்கலைக்கழகங்களுக்கான வகுப்புகள் அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும். இந்த உத்தரவானது அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

தமிழகத்தில் அக்.6 & 9ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிப்பு – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

அதே நேரத்தில் பள்ளிகள் அக்டோபர் 1ம் தேதி முதல் 8 மற்றும் 11ம் வகுப்பிற்கான நேரடி வகுப்புகளை தொடங்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து கல்வி நிறுவனங்களும், சமூக இடைவெளியை பராமரிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற கடுமையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அது போல கட்டிட வளாகங்களை சுத்தப்படுத்துதல் மற்றும் தெர்மல் ஸ்கேனிங்கும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் 144 தடை உத்தரவு அமல்? மத்திய அரசு அறிவுறுத்தல்!

இதற்கிடையில் அசாம் மாநில அரசு கடந்த செப்டம்பர் 20ம் தேதி முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டுமாக துவங்கியுள்ளது. இதற்கு முன்னதாகவே செப்டம்பர் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது அடுத்த மாதம் முதல் துவங்க இருக்கும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் வாரத்தில் 3 நாட்கள் வரை மட்டுமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்பதையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!