TN MRB 119 காலிப்பணியிடங்கள் – அக்.28 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அலுவலர் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு வரும் அக்டோபர் 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கான விண்ணப்ப கட்டணம், தேர்வு செயல்முறை குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்புகள்
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அலுவலர் பணியில் காலியாக இருக்கும் சுமார் 119 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விண்ணப்ப செயல்முறைகளை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற MRB இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் அக்டோபர் 28ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காலியிட விவரங்கள்:
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் தற்காலிக அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு 119 காலியிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்ப பதிவுகளை செலுத்துவதற்கு விண்ணப்பதாரர்கள் ரூ.700 கட்டாணம் செலுத்த வேண்டும்.
- மேலும் SC, SCA, ST, DAP (PH) ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 350 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் CBT மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு, சுழற்சி விதிகள் மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிற நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செயல்முறை காணப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- www.mrb.tn.gov.in என்ற MRBன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை திறக்கவும்.
- அதன் முகப்பு பக்கத்தில் ‘online registration’ என்ற இணைப்பை தேர்வு செய்யவும்
- உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
- எதிர்கால குறிப்புக்காக அந்த நகலை சேமித்து வைக்கவும்.