பிளஸ் 1 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதிகள் மாற்றம் – கல்வி துணை இயக்குனர்!
காரைக்கால் மாவட்டத்தில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கும் தேதிகள் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளதாக காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் அறிவித்துள்ளார்.
கலந்தாய்வு மாற்றம்:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மாற்று மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான மதிப்பீடு முறையும் முன்னதாக கல்வி வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காரைக்கால் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டது.
இனி ஹோட்டல் மெனுவில் ‘கோழிக்கறி’ இருக்காது – கேரள உணவகங்கள் திடீர் முடிவு!
அதன்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் முதல் கட்டமாக ஜூலை 12ம் தேதி வெளியிடப்பட்டு, 14ம் தேதி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அரசு ஆணை வெளியிட்டது. அதன் பின்னர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 19ம் தேதி வெளியிடப்படும். அதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பணிகள் ஜூலை 21ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் தனியார் பள்ளி மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 22ம் தேதி வெளியிடப்பட்டு ஜூலை 23ம் தேதி கலந்தாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூலை 21ம் தேதி பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால், அரசு உதவி பெறும் பள்ளிகளின் கலந்தாய்வு ஜூலை 22ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. மேலும், தனியார் பள்ளி தரவரிசை பட்டியல் ஜூலை 23ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 26ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் அறிவித்துள்ளார்.