பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – விடுமுறை அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வந்த 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்க அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த ஆண்டு இறுதியில் கொரோனா 3ம் அலைக்கான முன்னறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருந்ததால், ஆரம்ப பள்ளி வகுப்புகளை திறப்பதற்கு சில மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஏறக்குறைய ஒன்றரை வருட இடைவெளிக்கு பிறகு, ராஜஸ்தானில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட மற்ற அனைத்து வகையான கல்வி நிறுவனங்களிலும் நேரடி வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நாளை நேர்காணல்!
அதன் படி கடந்த செப்டம்பர் மாதம் முதல், ஆரம்ப கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் 50 சதவீத திறனுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்தது. இப்போது பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸையாவது பெற்றிருக்க வேண்டும் என அரசு வலியறுத்தி இருந்தது.
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அரசுக்கு வலியுறுத்தல்!
இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வந்த 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்க அப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வார துவக்கத்தில் தெலுங்கானாவின் வைரா பகுதியில் அமைந்துள்ள அரசு குடியிருப்பு பள்ளியை சேர்ந்த 28 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.