தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நாளை நேர்காணல்!
தமிழகத்தில் பொள்ளாச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீட்டு துறையில் கிராமிய அஞ்சல் காப்பீட்டு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரிகளுக்கான நேர்முகத்தேர்வு நாளை (நவ.24ம் தேதி) காலை நடைபெற உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அஞ்சல் துறையில் வேலை:
இந்தியாவில் அஞ்சல் துறையின் கீழ் மத்திய அரசு பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் அனைத்து அஞ்சல் துறையின் வாயிலாக மக்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் காப்பீடு மற்றும் கிராமிய காப்பீடு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீட்டு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கிராமிய அஞ்சல் காப்பீட்டு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பணி நியமனமானது நேரடித்தேர்வு முறையில் அனைத்து அஞ்சல் துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அரசுக்கு வலியுறுத்தல்!
இந்த பணியிடங்களுக்கு 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதி உடையவர்களாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் இந்த பதவிக்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர். தற்போது இந்த காலிப்பணியிட அறிவிப்பானது பொள்ளாச்சி அஞ்சல் கோட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கிடுகிடுவென சவரனுக்கு ரூ.768 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட அலுவலகத்திற்கு நாளை நவ.24ம் தேதி அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். நேர்முகத் தேர்வில் பங்கு பெறுபவர்கள் அசல் கல்வித் தகுதி சான்று, வயது சான்று, இருப்பிடச் சான்று, ஆதார் எண், பான் கார்டு உள்ளிட்டவற்றுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இந்த நேர்முக தேர்வின் மூலம் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.