10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 10மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு நேற்று அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு ரத்து:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த காரணத்தால் சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ கல்வி வாரிய 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல மாநில கல்வி வாரியங்களும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்புக்களை வெளியிட்டது. இடைநிலை கல்வி வாரியத்தின் மாணவர்களுக்கு முடிவுகளின் மதிப்பீடு முறையை வடிவமைக்க 12 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
30 லட்சம் ஐடி ஊழியர்களின் பணிக்கு ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்!!
மணிப்பூர் மாநில அரசு நேற்று வரை 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பதாக அறிவித்தது. இந்நிலையில் நேற்று கொரோனா தொற்று பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மாநிலத்தின் 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை நடத்தும் உயர்கல்வி கவுன்சில் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்தும் இடைநிலைக் கல்வி வாரியம் ஆகியவை அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
கொரோனா தொற்றால் பரவல் நிலைமை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், கல்வி வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கான மதிப்பீடு முறை மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் குறித்த தகவல்கள் மாநில அரசின் ஒப்புதலுக்கு பின்னர் வெளியிடப்படும் என்றும் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.