30 லட்சம் ஐடி ஊழியர்களின் பணிக்கு ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்!!
உலக அளவில் தானியங்கி தொழில்நுட்பம் அபார வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் 30 லட்சம் ஐடி ஊழியர்கள் தங்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
ஐடி ஊழியர்கள்:
தற்போதைய காலத்தில் தானியங்கி தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்து வருவதால் மனிதர்களின் தேவை குறைந்து வருகிறது. காரணம் மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் குறைந்த நேரத்தில் விரைவாக தானியங்கி தொழில்நுட்பம் செய்து விடுகிறது. தற்போது அந்த வகையில் ஓர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தற்போதைய காலத்தில் இந்தியாவில் ஐடி துறையில் சுமார் 1.60 கோடி பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் 30 லட்ச ஐடி ஊழியர்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தங்களது வேலையை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய 1 ரூபாய் தாளுக்கு ரூ.45,000 பெறலாம் – எப்படி தெரியுமா?
1.60 கோடி ஐடி ஊழியர்களில் 90 லட்சம் பேர் சிறிய நிறுவனங்களிலும், பிபிஓக்களிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 30 லட்சம் பேர் தங்களது வேலையை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தானியங்கி தொழில்நுட்பமே. ரோபோ செயல்முறை ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் நன்கு பலன் அளித்து வருவதால் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் 30 லட்சம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
30 லட்ச ஐடி ஊழியர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் 7 லட்ச தானியங்கி தொழில்நுட்பம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்கத்தால் இந்தியாவை போல் அமெரிக்காவிலும் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் அமெரிக்க டாலரும், அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் அமெரிக்க டாலரும் செலவாகிறது. தானியங்கி தொழில்நுட்பம் மூலம் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.