தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாதம் ரூ.1000 உதவித்தொகை!
தமிழகத்தில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பு பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவிகள் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
உதவித்தொகை:
தமிழகத்தில் கொரோனா பேரிடருக்கு பின்பு கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இதனையடுத்து பள்ளிகளில் 100% மாணவர் வருகையுடன் விரைந்து பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது. இதன் பேரில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்தனர். தொடர்ச்சியாக கடந்த வாரம் பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் மார்ச் 21 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? அரசு எடுக்கப்போகும் முடிவு!
மேலும் வரும் வாரத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி அமைச்சர் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.
அந்த வகையில் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இடைநிற்றல் இன்றி கல்லூரி படிப்பை முடிக்கும் வரை 1000 ரூபாய் உதவித்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் இத்திட்டத்தின் மூலம் சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்