தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு ரேஷன் கடைகளில் கூடிய விரைவில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1000 ரூபாய் திட்டம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக வெற்றி அடைந்து தற்போது ஆட்சி அமைத்து வருகிறது. திமுக சட்டமன்ற தேர்தலின் போது பலவிதமான கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர். அதில் மிகவும் குறிப்பான ஒன்றுதான் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது. திமுக ஆட்சி அமைத்து 7 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் இந்த திட்டம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | E- Aadhaar டவுன்லோட் செய்வது எப்படி?
இந்த திட்டத்தின் மூலமாக பயன் அடைய வேண்டும் என்று பலரும் தமிழகத்தில் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தனர். கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இது குறித்த அறிவிப்பு ஒன்றினை அமைச்சர் கே என் நேரு வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பினை முதல்வர் முறையாக அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கூடிய விரைவில் தொடங்கப்பட இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.