மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
வயதானவர்களுக்கு வழங்கப்படும் பென்சன் தொகை தற்போது 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இமாசல பிரதேச மாநில அரசு அந்த தொகையை 1500 ரூபாயாக உயர்த்த உள்ளதாக தெரிவித்து உள்ளது.
பென்சன் பெறுபவர்கள் கவனத்திற்கு:
இந்திய நாடு முழுவதும் வயதானவர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது இமாச்சல பிரதேச மாநிலத்திலும் முதல்வர் ஜெய் ராம் தாகூர் 2022-23 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் மாநிலத்தில் உள்ள பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் நிறைய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு விரைவில் பலன்கள் – வலுக்கும் கோரிக்கைகள்!
அதில் மிக முக்கியமான ஒன்று பென்சன் தொகை உயர்வு ஆகும். முதியோருக்கு மாதாந்திர பென்சன் தொகை தற்போது நடைமுறையில் உள்ள 1,001 என்ற தொகையில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பென்சன் பெறும் முதியவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது தவிர இன்னொரு அறிவிப்பும் வந்துள்ளது. அது என்னவென்றால், பென்சன் பெறும் வயது வரம்பும் குறைக்கப்பட்டுள்ளது. பென்சன் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு தற்போது நடைமுறையில் உள்ள 70 வயதிலிருந்து 60 வயதாகக் மாற்றப்பட்டுள்ளது. பென்சன் பெறுவதற்கான வருமான வரம்பு எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளது.
தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம் – பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!
அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பென்சன் தொகை உயர்வு குறித்து பரிந்துரை செய்துள்ளது. மேலும், ஊழியர்களுக்கான பணிபுரியும் வயது வரம்பை உயர்த்துவது போன்ற பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளது.