தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம் – பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால், பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக ,பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுகு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து சேவை முடக்கம்:
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு, தொடர் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுகு விஜயரட்ண முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களைக் கருத்தில்கொண்டு காலை,மாலை இருவேளையில் மட்டும் பேருந்து சேவைகள் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு – அரசுக்கு கோரிக்கை!
ஒரு நாள் பேருந்து சேவைக்கு தேவையான டீசல் பெறுவதில் கூட பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இயலாத நிலை தொடர்கிறது. எரிபொருள் இல்லாததால், மூன்று அனல் மின் நிலையங்களின் செயல்பாடு முழுமையாக முடங்கியுள்ளது. இதனால் மின் பற்றாக்குறை அதிகரித்து மின்வெட்டு தொடர்ச்சியாக உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD கணக்கிற்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கி!
இந்த நிலையில் இரவில் தனியார் பேருந்து சேவைகள் ஈடுபடாது என்று கூறியுள்ளார்.இந்த எரிபொருள் பற்றாக்குறையே காரணமாக 25 பேருந்துகள் மட்டுமே பேருந்து சேவையில் ஈடுபட உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் யாழ்ப்பாண டிப்போக்களில் இருந்து மட்டுமே எரிபொருளை பெறமுடிகிறது எனவும் குறிப்பிட்டு உள்ளார். கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக நீண்ட தூர பேருந்து சேவைக்கு வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.