ஐடி துறையில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

0
ஐடி துறையில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
ஐடி துறையில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
ஐடி துறையில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் அடுத்த 8 மாதத்திற்குள் 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக அமெரிக்க நிறுவனமான ஆக்ஸ்ட்ரியா தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு:

ஐடி நிறுவனங்களில் இனி வரும் ஆண்டுகளில் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கவனம் செலுத்த இருப்பதால் அதிகளவிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். மேலும், இனி வரும் மாதங்களில் அதிகளவிலான ஐடி ஊழியர்கள் பாதிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில் ஆக்ஸ்ட்ரியா என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

கோடை வெப்ப அலை தாக்கம் அதிகரிப்பு – நீட்டிக்கப்படும் பள்ளி விடுமுறைகள்!

அதாவது, அடுத்த 8 மாதத்திற்குள் டேட்டா சயின்ஸ், மென்பொருள் மேம்பாடு, டேட்டா இன்ஜினியரிங் போன்ற பணிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக ஆக்ஸ்ட்ரியா தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் பெங்களூரு, நொய்டா, குருகிராம் ஆகிய இடங்களில் ஆக்ஸ்ட்ரியா நிறுவனத்தின் கிளைகள் உள்ள நிலையில் அடுத்தாக புனே மற்றும் ஹைதராபாத்தில் புதிய கிளைகள் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறது. அதாவது, இன்றைய வாழ்வியல் நடைமுறைகளை சார்ந்து அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவு தேவைகளுக்கு ஏற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக ஆக்ஸ்ட்ரியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!