விரைவில் புதுச்சேரியில் 100% தடுப்பூசி செலுத்தப்படும் – தமிழிசை சௌந்தராஜன் அறிவிப்பு!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு விரைவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
100% தடுப்பூசி:
கொரோனா தொற்றின் 2ம் அலை காரணமாக முன்னதாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் புதுச்சேரியில் அமலில் இருந்தது. பின்னர், தீவிர கட்டுப்பாடுகளின் விளைவினால் படிப்படியாக தொற்று பாதிப்புகள் குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தகர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இறுதியாக அக்டோபர் 15ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நாளை சந்திப்பு – எடப்பாடி பழனிச்சாமி!
நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பல முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் புதுவை அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிப்புகள் குறைந்துள்ள காரணத்தால் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில், இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அங்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, புதுச்சேரியில் தற்போது வரை 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.