தமிழ்நாடு காவல்துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு! இளைஞர்கள் கவனத்திற்கு!

0
தமிழ்நாடு காவல்துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் - விரைவில் அறிவிப்பு! இளைஞர்கள் கவனத்திற்கு!
தமிழ்நாடு காவல்துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் - விரைவில் அறிவிப்பு! இளைஞர்கள் கவனத்திற்கு!
தமிழ்நாடு காவல்துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு! இளைஞர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாடு காவல் துறையில் 500 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 10,000 காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் தற்போது அரசு துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் குரூப் 2 தேர்வின் கீழ் 5831 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் இந்த வருடம் போட்டித்தேர்வின் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக தேர்வர்களால் எதிர்பார்க்க கூடிய குரூப் 4 தேர்வில் கீழ் காலியாக உள்ள 5255 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து காவல்துறையிலும் காலிப்பணியிடங்கள் உள்ளது. தமிழகத்தில் காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்ற இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – பிப்ரவரி 22 கடைசி நாள்!

கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு TNUSRB (PC) பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு உடல்தகுதித் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. பிப்ரவரி 1ம் தேதி தேர்ச்சி செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்த காரணத்தால் பயிற்சி மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதில் 2022ம் ஆண்டில் தமிழக காவல் துறையில் புதிதாக 10,000 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். காவல்துறையில் வேலை வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இப்போதிலிருந்தே எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!