தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – பிப்ரவரி 22 கடைசி நாள்!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு - பிப்ரவரி 22 கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு - பிப்ரவரி 22 கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – பிப்ரவரி 22 கடைசி நாள்!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் காரைக்குடி கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகம் முழுவதும் வேலை தேடிக்கொண்டு இருப்பவா்கள், சுய தொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் மேம்பாட்டு ஊழியர்களுக்கு அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணி புரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை காரைக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பி. ஹுசைன் அகமது செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலை தேடிக்கொண்டிருப்பவா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு மத்திய, மாநில அரசு ஊழியா்களும் பயனடையலாம்.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – விடுபட்டவர்களுக்கும் உண்டு! அமைச்சர் அறிவிப்பு!

பணியின் பெயர்: அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்

விண்ணப்பதாரர் கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தோ்ச்சி

விண்ணப்பதாரர் வயது வரம்பு: 18 முதல் 50 வரை

விண்ணப்பதாரர்க்கு ஊக்கத்தொங்கி விவரம்: இப்பணிக்கு தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு செய்யும் வணிகத்துக்கு ஏற்ப ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும் மற்றும் அவர்களுக்கு சம்பளம் என்று தனிஊதியம் வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு தோ்வு செய்யப்படுபவா் ரூ.5000 திற்கு எஎஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமா்ப்பிக்க வேண்டும் மற்றும் இந்த பத்திரம் அவா்கள் உரிமம் முடியும் போது திருப்பித் தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை அருகிலுள்ள அஞ்சலகங்களில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட பின் விண்ணப்பத்துடன் பான் அட்டை, ஆதார் அட்டை, முகவரி சான்று, கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், காரைக்குடி கோட்டம், காரைக்குடி – 630003 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 22, 2022.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!