தமிழகத்தில் Security பணிக்கு ஆட்கள் தேவை – ரூ.10,000 சம்பளம்!
தமிழகத்தில் தொடர்ந்து விலை அதிகரித்து வரும் தக்காளி மற்றும் சிலிண்டர்களை பாதுகாக்க அனுமதிபெற்ற துப்பாக்கி வைத்திருக்கும் செக்யூரிட்டி பணிக்கு தேவை என்று தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் வெளியிட்டுள்ளது.
Security வேலை:
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பயிரிடப்பட்ட விவசாயங்கள் சேதமடைந்துள்ளன. அதனால் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை ரூ.150 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசு மக்கள் நலன் கருதி ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது தக்காளியை பதுக்கி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!
மேலும் நியாயவிலை கடை மற்றும் பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியிட்டது. அதன் பின்னர் மாநிலங்களில் மழைப்பொழிவு குறைந்துள்ளதை தொடர்ந்து தக்காளியின் வரத்து அதிகரித்து விலை ரூ.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் தக்காளியின் விலை அதிகரிக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். அதே போல் மத்திய அரசு மாதத்திற்கு இரு முறை சிலிண்டர் விலையில் மாற்றத்தினை கொண்டு வருகிறது.
CBSE பள்ளி மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
அதன்படி வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இவ்வாறு அதிக விலையில் விற்பனை செய்யக்கூடிய தக்காளி மற்றும் சிலிண்டரை பாதுகாக்கும் வகையில் அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருக்கும் செக்யூரிட்டி வேலைக்கு தேவை என்று தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் வெளியிட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.