CBSE பள்ளி மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பருவமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றிய முடிவுகளை அந்தந்த பள்ளி நிர்வாகமே எடுத்துக் கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு விவரம்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது. அதனால் மாணவ மற்றும் மாணவியர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது மொபைல் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக பாடங்களை கற்று வந்தனர். அதன் பின்பு நவ.1 ஆம் தேதி அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் இயல்பான நிலையில் இயங்கி வருகின்றன. ஆனால் பருவமழைக் காலம் என்பதால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகின்றன. அத்துடன் கொரோனா நோய்த்தொற்றின் 3-வது அலை தொடங்க உள்ளது. அதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக மழைப்பொழிவு ஏற்படும் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் ஒரு மணிநேரத்திற்கு ரூ.3000 ஊதியம் – குடிமைத்தேர்வு பயிற்றுநர்களுக்கு அறிவிப்பு!
இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்களின் பொதுத்தேர்வினை எப்படி நடத்துவது என தெரியாமல் சிந்தித்து வருகின்றன. கடந்த முறை சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி முதல் பருவ பொதுத்தேர்வு நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும் இரண்டாம் பருவ பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 2022 – ஆம் ஆண்டும் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்வு தேதிகள் வெளியாகின.
தமிழக அரசின் அரிசி ரேஷன் கார்டை, சர்க்கரை கார்டாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அதன்படி 10-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நவம்பர்-30 முதல் டிசம்பர்-9 வரை நடைபெறும் என்றும், அதேபோல் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு டிசம்பர்-1 முதல் டிசம்பர்-18 தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதனை தொடர்ந்து மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களின் பொதுத்தேர்வினை நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதன் பின்பு தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது குறித்த அறிக்கையை சிபிஎஸ்இ போர்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.