நடிகர் சூரியின் குடும்ப திருமண விழாவில் 10 பவுன் தங்க நகை திருட்டு – விசாரணை தீவிரம்!
தமிழ் திரையுலக பிரபலம் நடிகர் சூரியின் அண்ணன் மகளது திருமண விழாவில், சுமார் 10 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகை திருட்டு
சினிமா உலகில் அறிமுகமாகி சில வருடங்களிலேயே தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகர் சூரி. ‘வெண்ணிலா கபடிக்குழு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காட்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சூரி, தற்போது அனைத்து முன்னணி நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சூரி நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் திரு.வெற்றிமாறனின் திரைப்படம் ஒன்றில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
மதுரையை சொந்த ஊராக கொண்ட நடிகர் சூரி, கடந்த 9 ஆம் தேதியன்று மதுரையை அடுத்துள்ள சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது அண்ணன் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சூரியின் நெருங்கிய சினிமாத்துறை நண்பர்களான நடிகர்கள் விமல், சிவகார்த்திகேயன், ஆர்யா, ரோபோ சங்கர், கருணாஸ் இயக்குனர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பாசிரியர் பணிக்கான தமிழ் வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் – ஆசிரியர்கள் வேதனை!
இந்நிலையில் அந்த திருமண விழாவின் போது மண்டபத்துக்குள் புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த 5 பவுன் தங்கசெயின், 3 பவுன் தங்கமாலை, 2 பவுன் கைச்செயின் போன்ற 10 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து நடிகர் சூரியின் மேலாளர் சூரியபிரகாஷ் என்பவர் கீரைத்துறை குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்த CCTV காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.