மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!
திரிபுரா மாநிலத்தில் தற்போது 10.72 சதவீத நேர்மறை விகிதத்தை எட்டியுள்ள கொரோனா 3ம் அலைப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
முழு ஊரடங்கு
மாநிலம் முழுவதும் கொரோனா வழக்குகளின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இரவு ஊரடங்கு உத்தரவை அடுத்த 10 நாட்களுக்கு நீட்டித்து திரிபுரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் இரவு ஊரடங்குச் சட்டம் இப்போது இரவு 9 மணிக்குப் பதிலாக இரவு 8 மணிக்குத் தொடங்கி, முன்பு போலவே காலை 5 மணி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இம்மாநிலத்தில் கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சி NIT டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2022 – ஜன.25ம் தேதி கடைசி நாள்!
இப்போது திரிபுரா மாநிலத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தகவல் மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி கூறுகையில், திரிபுராவில் ஒரு வாரத்திற்கு முன்பு 2.38 சதவீதத்தில் இருந்த கொரோனா நேர்மறை விகிதம் 10.72 சதவீதத்தை எட்டியுள்ளது. அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷனின் (AMC) கீழ் உள்ள பகுதிகள் 23.15 சதவீத நேர்மறை விகிதத்தை பதிவு செய்துள்ளன. இந்த சூழலை கட்டுப்படுத்தும் வகையில், இரவு ஊரடங்கு உத்தரவை ஒரு மணி நேரம் அதிகரித்து ஜனவரி 30 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.
தொடர்ந்து ஜனவரி 29 அன்று அரசாங்கம் மீண்டும் கொரோனா நிலைமையை மதிப்பாய்வு செய்யும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய உத்தரவின்படி, ஜனவரி 20 முதல், மால்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், பிக்னிக் ஸ்பாட்கள், திரைப்பட அரங்குகள், கண்காட்சிகள் மற்றும் மேளா போன்றவை மூடப்படும் என்றும் ஜனவரி 23க்குப் பிறகு கீர்த்தனை நிகழ்வுகள் உட்பட அனைத்து மத நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிப்.28 வரை சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு – மத்திய அமைச்சகம்!
என்றாலும் மக்கள் அனைத்து நேரங்களிலும் கொரோனா பொருத்தமான நடத்தையை பராமரிக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசங்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரிபுராவில் இதுவரை ஒமிக்ரான் வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், கொரோனா 3மேல் அலைபரவல் தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் இந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.