கடன் தவணை (EMI) செலுத்த 1 வருடம் கால அவகாசம் – அரசிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடன் தவணைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடன் தவணை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பல தனியார் நிறுவனங்கள் கடைகள் செயல்பட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அகவிலைப்படி DA உயர்வு அதிகாரபூர்வ அறிவிப்பு – விரைவில் வெளியீடு!!
இதனால் மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய அரசு தரப்பில் ரூ.4000 கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முதல் தவணை ரூ.2000 மே மாதமே வழங்கப்பட்டுள்ளது. இவை மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது. இந்நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில், மக்கள் கொரோனா பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயூள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, தனிநபர் கடன் தவணை, கிரெடிட் கார்டு கடன் தொகை, வீட்டுக்கடன் போன்றவை மத்திய மாநில அரசு வங்கிகளில் மாதந்தோறும் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த கடன் தவணையை செலுத்த 1 வருடம் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் நாடு முழுவதும் பல கோடி பேர் படிப்படியாக தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு பழைய சகஜநிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.