TCS நிறுவனத்தில் 1+ லட்ச ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு – 2022ம் நிதியாண்டில் சாதனை!
பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான TCS கடந்த நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சுமார் 68,000 புதியவர்களை பணியமர்த்தி இந்த எண்ணிக்கையை தற்போது 1 லட்சத்துக்கும் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலை வாய்ப்பு
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கடந்த 2022ம் நிதியாண்டை ஒரு புதிய சாதனையுடன் முடித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, நிகர அடிப்படையில் 1 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை பணியமர்த்தி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு வருடத்தில் நாட்டில் உள்ள எந்த ஒரு மென்பொருள் சேவை நிறுவனமும் மேற்கொள்ளாத அதிகபட்சமாகும். அந்த வகையில் கடந்த நிதியாண்டில் முதல் மூன்று காலாண்டுகளில், TCS நிறுவனம் சுமார் 68,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
அதே போல நான்காவது காலாண்டில் 35,209 ஊழியர்களுக்கு இந்நிறுவனம் வேலை வாய்ப்பு அளித்துள்ளது. நிகர அடிப்படையில், 2021-22 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 1,03,546 பணியாளர்களை TCS பணியமர்த்தியுள்ளது. அந்த வகையில் மார்ச் 2022 இன் இறுதியில் TCSன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 5,92,195 ஆகும். இதில் 153 நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களும் அடங்குவர். குறிப்பாக, அவர்களில் 35.6 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இருப்பினும், இந்த நிறுவனத்தின் தேய்மான விகிதமும் தொடர்ந்து கவலைக்கிடமாக தான் இருக்கிறது.
ஏனென்றால் தகவல் தொழில்நுட்ப சேவைகளில் TCS நிறுவனத்தின் தேய்மானம் கடந்த காலாண்டில் 17.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் 8.6 சதவீதமாகவும், டிசம்பர் 2021 காலாண்டில் 11.9 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையில் மார்ச் 31, 2022 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 7 சதவீதம் உயர்ந்து தற்போது ரூ.9,926 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலாண்டில் TCS நிறுவனத்தின் வருவாய் ரூ. 50,591 கோடியாக உயர்ந்துள்ளது.
இது ஒரு வருடத்திற்கு முந்தைய மூன்று மாதங்களில் ரூ.43,705 கோடியிலிருந்து சுமார் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ.24.97 ஆக இருந்தது குறிபிடத்தக்கது. இந்த வளர்ச்சி குறித்து TCS தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷ் கோபிநாதன் கூறும் போது, ‘டீன் ஏஜ் பருவத்தின் இடைப்பட்ட வளர்ச்சி மற்றும் அதிகபட்ச வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் FY 22 ஐ ஒரு வலுவான குறிப்பில் நிறைவு செய்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான பயணங்களில் பங்கேற்பு அதிகரித்து வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.