தமிழகத்தில் 1.90 லட்சம் காவல்துறையினர் குவிப்பு – தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

0
தமிழகத்தில் 1.90 லட்சம் காவல்துறையினர் குவிப்பு - தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

தமிழக மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் இங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீவிர பாதுகாப்பு:

நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் நேற்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தொகுதிகளில் உள்ள அந்நிய நபர்களை வெளியேற்றும் பணிகள் மற்றும் சோதனை பணிகள் அனைத்தும் தீவிர கதியில் நடந்து வருகிறது. தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கும், தமிழகத்தின் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4000 காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 29 கடைசி தேதி!

வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் இன்று கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் ஓட்டு சாவடிகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் இத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தில் 1.90 லட்சம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!