ஆன்லைன், ஆப்லைனில் இறுதி பருவ தேர்வு ! – தமிழக உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு
தமிழக கல்லுரிகளில் ஆன்லைன், ஆப்லைனில் என இரு முறைகளிலும் இறுதி பருவ தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி .அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன், ஆப்லைனில் இறுதி பருவ தேர்வு:
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்களின் வசதிக்காக ஆன்லைன் தேர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பிற மாணவர்களுக்கு ஆப்லைனில் எழுத்து தேர்வு நடத்தப்படும் எனவும், ஆன்லைன், ஆப்லைன் தேர்வு தொடர்பாக அந்தந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
கல்லுரிகளில் தனிமைப்படுத்துதல் முகாமாக செயல்படும் கட்டிடம் தவிர பிற இடங்கள், பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விபரங்கள், கட்டட வசதிகள், ஆன்லைன், ஆப்லைன் தேர்வுகள் குறித்து விபரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் கேபி அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்