CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பூஜ்ஜிய மதிப்பெண்கள் – கல்வி வாரியம் விளக்கம்!
12 ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, அம்மாணவர்களுக்கான இறுதி மதிப்பீடுகளில் பூஜ்ஜிய மதிப்பெண்கள் வழங்க வேண்டாம் எனவும், ஜூலை 15 க்குள் மதிப்பெண்களை சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் நடைபெற இருந்த CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. இவற்றில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்பதால், அவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் CBSE மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் பள்ளிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளியில் சேராத குழந்தைகள் கணக்கெடுப்பு – பள்ளிக் கல்வித்துறை திட்டம்!
இதற்கிடையில் சில பள்ளிகள் CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளில் பூஜ்ஜிய மதிப்பெண்கள் வழங்கியிருந்தன. அதாவது பல்வேறு காரணங்கள் நிமித்தமாக ஒரு மாணவர் பல பள்ளிகளில் மாற்றப்பட்டபோது, அவர்களால் எந்தவொரு தேர்விலும் கலந்து கொள்ள முடியாத நிலையில், பொதுத்தேர்வு முடிவுகளில் அம்மாணவர்களுக்கு பூஜ்ஜிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மாணவர்களுக்கு பூஜ்ஜியம் கொடுக்க வேண்டாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மதிப்பீடுகள், 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து கணக்கிடப்பட்டு வருகிறது. அதன் படி 11, 12 ஆம் வகுப்புகளில் +2 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை, ஜூலை 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக CBSE வாரியம் ஒரு போர்டலை அமைத்துள்ளது. மேலும் இது குறித்த விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்ள IT தொடர்பில்லாத கேள்விகளுக்காக 9311226587, 9311226588, 9311226589, 8311226590 என்ற எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஐடி தொடர்பான கேள்விகளுக்கு, பள்ளிகள் 9811226591 என்ற எண்ணை அணுகலாம். தவிர ஜூலை 31 ஆம் தேதிக்குள் சுமார் 14 லட்சம் +2 மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெறுவார்கள். இதற்காக கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவை பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்றுமாறு CBSE வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளில் திருப்தி அடையாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் மறுதேர்வு நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.