மத்திய அரசு சமீபத்தில் தகுதி இல்லாத ரேஷன் கார்டு பயனாளிகளின் பெயரை நீக்கிய நிலையில், மீண்டும் பெயர் சேர்க்க விரைவில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரேஷன் கார்டு
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது. அது தவிர ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. மேலும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருட்கள் 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன.
ECHS ஆணையத்தில் Medical Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.75,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
இந்நிலையில் மத்திய அரசு தகுதி இல்லாத ரேஷன் கார்டுகளை நீக்கும் நடவடிக்கையை சமீபத்தில் எடுத்து. அதனால் பலருடைய ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டது. அப்படி உங்களுடைய ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டாலும் கோதுமை, தானியங்கள் போன்றவை கிடைக்கும். மேலும் ரேஷன் கார்டு பட்டியலில் உங்கள் பெயர் விரைவில் சேர்க்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கு உணவு வழங்கல் துறைக்கு சென்று அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகலை இனைத்து விண்ணப்பித்தால், உங்களுடைய பெயர் மீண்டும் சேர்க்கப்படும்.