“நீ இன்னும் சாகவில்லையா” என கேட்ட ரசிகர் – நடிகை யாஷிகா ஆனந்தின் மனதை உருக்கும் பதில்!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். அவருக்கு சமீபத்தில் பெரிய விபத்து ஏற்பட்ட நிலையில், இன்னும் நீ சாகவில்லையா என்ற ரசிகரின் கமெண்ட் ஒன்றிற்கு அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
யாஷிகா ஆனந்த்:
தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே தனக்கென்று தனி இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அவர் பல திரைப்படங்களில் சிறிய ரோலில் நடித்தாலும், விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் நல்ல பிரபலமானார். அதன் பின் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் கடமையை செய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் பல மாடல் போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வைத்திருந்தார்.
கருப்பாக இருந்து கலராக மாறியது எப்படி? ரசிகர்களின் கேள்விக்கு மைனா நந்தினி அளித்த பதில்!
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் மாமல்லபுரம் அருகே அவரது நண்பர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது யாஷிகா சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் அவரது அமெரிக்கா தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். யாஷிகாவின் இடுப்பு பகுதியில் அடிபட்டிருந்தது. தான் எழுந்து நடக்க 5 மாதங்கள் ஆகும் எனவும், காலில் போட்ட தையல்கள் குறித்த வீடியோவை அவர் பதிவிட்டு வருகிறார்.
மேலும் அவர் எழுந்து நடக்க முயற்சி செய்த வீடியோவை பதிவிட்டு தன்னம்பிக்கை பதிவாக அதை குறிப்பிட்டிருந்தார். தனது வீட்டிற்கு சென்று அங்கேயும் வீடியோ பதிவிட்ட அவர் கடந்த வாரம் விபத்திற்கு பின் முதன்முதலாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதை பார்த்த யாஷிகாவின் ரசிகர்களுக்கு உற்சாகம் மூட்டியது. இந்நிலையில் அவரது சமூக வலைத்தளத்தில் ஒருவர் யாஷிகாவின் பதிவு ஒன்றில் நீ இன்னும் சாகவில்லையா என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு யாஷிகா, தயவு செய்து கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் நான் சீக்கிரம் சாக வேண்டும் என பதில் அளித்துள்ளார். அதற்கு அவர், நிச்சயம் உங்களுக்காக நான் வேண்டிக் கொள்கிறேன் என்று பதில் அளித்துள்ளார். யாஷிகாவின் இந்த பதில் அனைவரையும் கலங்க செய்துள்ளது.