தமிழகத்தில் ஜூன் 28 வரை வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வங்கிகளில் நேர குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜூன் 28 வரை அமலில் இருக்கும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர குறைப்பு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கை ஜூன் 28 வரை அரசு அமல்படுத்தியுள்ளது.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கான 2GB இலவச டேட்டா திட்டம் – அரசுக்கு கோரிக்கை!!
இதன்படி அனைத்து கடைகளும் காலை 5 முதல் மாலை 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்து பொது போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் மாவட்டங்களுக்குள் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஊரடங்கு தளர்வுகளில் வங்கிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், ஏற்கனவே அறிவித்தது போல வங்கிகள் காலை 10 மணி முதல் 2 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் எனவும், இந்த கட்டுப்பாடுகள் ஜூன் 28 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தளர்வு கொரோனா பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, குறிப்பிட்ட நேர இடைவெளியில் கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் முடிந்த வரை ஆன்லைன் சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.