இந்திய ரயில்வே நிர்வாகத்தில் 2 ஷிப்ட்களில் பணி – புதிய அமைச்சர் உத்தரவு!
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் புதிய ரயில்வே அமைச்சராக பதவியேற்றிருக்கும் அஸ்வினி வைஷ்ணவ் தனது அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை இரண்டு ஷிப்டுகளில் பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஷிப்ட் முறையில் பணி:
தற்போதைய மத்திய அமைச்சரவையில் புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஸ்வினி வைஷ்ணவ் தனது பணியாளர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, ரயில்வே ஊழியர்கள் இனி 2 விதமான ஷிப்ட் முறைகளில் பணியில் ஈடுபட வேண்டும்.
கயலின் நடைவண்டிக்காக ஜீவா, மீனாவிற்கு இடையே நடக்கும் சண்டை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!
அதன் படி முதல் ஷிப்ட் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரையும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணிக்கும் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதிய அமைச்சர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையில் ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய பகுதியாக இருப்பதால், சாதாரண மனிதர்கள் அனைவரும் ரயில்வே பலனை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
கடந்த 1994ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியில் வகித்த வைஷ்ணவ், ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக உள்கட்டமைப்பில் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை கட்டமைப்பிற்கு அவர் அளித்த பங்களிப்பு மிக சிறந்ததாகும். மத்திய அமைச்சர் வைஷ்ணவ், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படிப்பும், கான்பூர் IIT யில் எம்.டெக்., படிப்பும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.