ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி? வெளியான தகவல்!
இந்தியாவில் கொரோனா நோய்பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14வது சீசன் ஐபிஎல் தொடர் யு.ஏ.இ.,வில் நடைபெறவுள்ள நிலையில் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதி குறித்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள்:
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் தொடரான 14வது சீசன் ஐபிஎல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வந்தது. கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் மிக பாதுகாப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டது. காரணம் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற பல வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வீரர்களின் நலன் கருதி ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் மற்றும் பெருந்தொற்று பாடங்கள் – மாநில அரசு முடிவு!
14வது சீசனில் மீதம் 31 போட்டிகள் இருக்கும் நிலையில் இதனை யு.ஏ.இ.,வில் உள்ள துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மைதானங்களில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. கடந்த ஆண்டும் கொரோனா நோய்பரவல் காரணமாக 13வது ஐபிஎல் தொடர் இந்த மைதானங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள 14 வது ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் அமீரிக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தகவல் ஒன்றை தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது, இந்த போட்டிகளை காண தடுப்பூசி செலுத்தியவர்களை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். மேலும் 50% மிகாமல் தடுப்பூசி செலுத்திய பார்வையாளர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.