தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களை தேடி பிடித்து தேர்வெழுத வைக்க உத்தரவு – கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை. அதனால் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டுபிடித்து துணைத்தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
கொரோனாவால் பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் உதவித்தொகை – புதுச்சேரி அரசு அதிரடி!
அதனால் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வில் கலந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு வராத 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பியுள்ளனர். அதன்படி இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடைநிற்றலை மேற்கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை தேடி கண்டுபிடித்த பொதுத்தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download