இரவு ஊரடங்கு நீட்டிப்பு, வார இறுதி ஊரடங்கு நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் மக்கள் தொடர்ந்து வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து வந்ததால், தற்போது வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாகவும், இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்வதாகவும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
வார இறுதி ஊரடங்கு நீக்கம்:
கர்நாடகாவில் கொரோனா நோய் மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் நோய் தடுப்பு நடவடிக்கையாக முன்னதாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அமலில் இருந்து வந்தது. தொடர்ந்து வார இறுதி ஊரடங்கு சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களிலும் அமலில் இருப்பதால் வணிகர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், இதனால் வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டும் என்றும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. கர்நாடகாவில் வியாழக்கிழமை 47,754 பேருக்கு புதிதாக COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் 29 பேர் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு – முதல்வர் அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் செயலில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 2,93,231 ஆக உள்ளது. தொடர்ந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து அரசு ஆலோசனை நடத்தியது. இது குறித்த அறிக்கையில், சனி மற்றும் ஞாயிறு வார இறுதி ஊரடங்கு நீக்கப்படுகிறது. நிபுணர்களின் அறிக்கையின் அடிப்படையில் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்போது, மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் சுமார் 5 சதவீதமாக உள்ளது. இது அதிகரித்தால், மீண்டும் வார இறுதி ஊரடங்கு அமுல்படுத்துவோம் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா தெரிவித்தார்.
கோவிட் வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தி வார இறுதி ஊரடங்குச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று அமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும். ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், ஜிம்கள், மால்கள் மற்றும் திரையரங்குகள் 50 சதவீத திறனில் செயல்பட அனுமதிக்கப்படும். பெங்களூருவில் நோய் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்படும் என்று கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.