தொடரும் லேசான மழை…தமிழகத்தில் 26ம் தேதி வரை மழை இருக்கு – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வருகிற 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையிலும், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 26ம் தேதி வரை தமிழக பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை பின்வருமாறு,
தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதனால் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதை தொடர்ந்து, வருகிற 23 முதல் 26ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை.