தமிழகத்தின் 20 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் – வானிலை மையம் அறிக்கை!!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்து வரவுள்ள நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பு நிலையை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக காணப்படும்.
வானிலை அறிக்கை
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (31-03-2021) முதல் நான்கு நாட்களுக்கு (04-04-2021) வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும்.
N Job “FB Group” Join Now
இன்று முதல் 4ஆம் தேதி வரை தரைக்காற்று வட மேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீசக்கூடும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பு நிலையை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக காணப்படும். மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம் தகவல்!!
இதன் காரணமாக அனல் காற்று வீசக்கூடும் என்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் திறந்தவெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு பதிவு செய்யப்படவில்லை. மத்திய அந்தமான் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்பதால் இன்று முதல் 2ஆம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.