இந்தியாவில் உறை பனி அலை தாக்கம் – அதிகரிக்கும் குளிர்.. வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது அதிக அளவு குளிர் நிலவி வருகிறது. அடுத்தாக உறை பனி அலை வீச கூடும். இதனால் ஜன. 14 முதல் குளிர் மிகவும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உறை பணி:
தற்போது வடக்கு திசையில் இருந்து வீசும் காற்று காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் நிலவும் அதிக குளிரினால் மக்கள் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
ரெடியாக இருங்கள் இளைஞர்களே.. ஆப்பிள் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ஜாக்பாட் அறிவிப்பு!
தற்போது நிலவும் கடும் குளிரால் மக்கள் உடல் நலக் கோளாறுகளுக்கு ஆளாகி உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு ஜார்கண்ட், பீகார், பஞ்சாப், டெல்லி உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது வட இந்திய மாநிலங்களில் வரும் நாட்களில் உறைபனி அலை வீசும். இதன் காரணமாக வரும் ஜனவரி 14 முதல் 19 ஆம் தேதி வரை குளிர் மிகவும் அதிகரிக்கும். மேலும் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.