தமிழக பள்ளிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – உயர்நீதிமன்ற உத்தரவு!

1
தமிழக பள்ளிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு - உயர்நீதிமன்ற உத்தரவு!
தமிழக பள்ளிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு - உயர்நீதிமன்ற உத்தரவு!
தமிழக பள்ளிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – உயர்நீதிமன்ற உத்தரவு!

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் பள்ளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த செய்தி பற்றிய விரிவான தகவல்களை கீழே உள்ள பதிவில் காணலாம்.

உயர்நீதிமன்றம்:

தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. இதையடுத்து மாணவர்களும் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இந்தியாவில் பரவி வந்த கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து மாணவர்களை தற்காத்துக் கொள்ள கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது. மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால் தொற்று குறைந்து நோய் பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது.

தமிழக சுற்றுலா துறையில் ரூ.1,00,000 சம்பளம் வரை வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த நிலையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில் பல புதிய கல்வி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவைகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதல் இன்றி இயங்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதல் இல்லாமலும் சேலம் அரிசி பாளையத்தில் சாய் விஹார் நர்சரி பள்ளி இயங்குவதால் அருகில் உள்ள பள்ளிக்கு மாணவர்களை மாற்றும் படி இம்மாதம் 2ம் தேதி வட்டார கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து பள்ளியின் நிறுவனர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாமல் இறுதி முடிவு எடுக்க முடியாது என்று வழக்கு விசாரணை செப்.9ம் தேதி வழக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே, சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதல் இல்லாமல் பள்ளிகள் இயங்குவது அரசின் கவனத்துக்கு வந்தால் அந்தப் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. பள்ளிகள் இடவசதி போக்குவரத்து‌வசதி இவ்விரண்டும் அவசியம். அவ்வாறு இடவசதி இல்லாமல் செயல்படும் பள்ளிகளை ஒன்றாக இணைந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எய்டேடு பள்ளிகளே இடவசதி இல்லாமல்‌ மதுரையில் செயல்படுகிறது ஏழ்மையான பகுதிகளில். அதிகாரிகள் ‌‌பணத்தை ப்பெற்றுக் கொண்டு செயல்பட அனுமதி கொடுத்துள்ளனர்.இப்படி தமிழ்நாட்டில் அரசு பணம் வீணடிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!