வாக்காளர்கள் கவனத்திற்கு – Voter Id பெயர் சேர்ப்பு & திருத்தம் செய்ய வாய்ப்பு! நவ.20, 21 சிறப்பு முகாம்கள்!
தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்கள் இருந்தால் அதனை மாற்றும் விதமாக சிறப்பு முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அடையாள அட்டையில் திருத்தம்:
இந்தியாவில் பிறந்து 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுகிறது. அவ்வாறு வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்கும். மேலும் இதற்கென்று தனித்துவமாக Voter எண் இருக்கும். இந்த Voter Id தனித்துவமான ஒரு ஆவணமாக அனைத்து இடங்களிலும் கேட்கும் ஒன்று ஆகும். இந்த Voter Id தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
சென்னைவாசிகள் கவனத்திற்கு, அத்தியாவசிய பொருட்கள் இருப்பு முக்கியம் – மாநகராட்சி எச்சரிக்கை!
இந்நிலையில் பெரும்பாலானோர் குடும்ப சூழ்நிலை மற்றும் திருமணம் காரணமாக வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அப்போது அவர்களது Voter Id – ல் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது முகவரி மாற்றம் செய்ய வேண்டும். சிலர் புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பார்கள், அவர்களுக்கும் பெயர், பிறந்த தேதி, முகவரி ஏதேனும் தவறாக இருந்தால் அதனையும் மாற்றி திருத்திக்கொள்ளுதல் அவசியமான ஒன்றாகும். இத்தகைய திருத்தங்களை மேற்கொள்வதற்கு அவர்கள் பகுதிக்கு உரிய தாலுகா ஆபிசுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்த 15 நாட்களுக்குள்ளாக ஆரம்பப் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு முடிவு!
தற்போது மக்களின் நலன் கருதி தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை கடந்த நவ.1 ம் தேதி தொடங்கி வரும் ஜன.5 ம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த நவ.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குசாவடிகளில் முகாம் நடைபெற்றது. ஆனால் ஒரு சில பகுதிகளில் மழையின் காரணாமாக முகாம் நடத்த முடியாத காரணத்தால் வரும் நவ.20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மீண்டும் முகாம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.