VOC துறைமுகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – ரூ.80,000/- ஊதியம்!!
வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் (VOC Port Trust) இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Chief Engineer Officer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறுதி தேதி வருவதற்கு முன்னரே விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- VOC துறைமுக கழகத்தில் Chief Engineer Officer பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சமாக 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.12.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.