கதிரின் உயிர் போகும் நேரத்தில் காப்பற்ற ஓடி வரும் ஜீவா, மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லையை அடிக்க ஆட்களை எதிர் டீம்மில் இருப்பவர்கள் ஏற்பாடு செய்கின்றனர். மறுபக்கம் முல்லை சொன்னதை கேட்டு ஜீவா மூர்த்தியை அழைத்து கொண்டு மதுரைக்கு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை ஜீவாவிடம் கதிரை அடிக்க எதிர் டீம்மில் இருப்பவர்கள் ஆட்களை அழைத்து கொண்டு வந்திருப்பதாக அழுது கொண்டே சொல்கிறார். ஜீவா அதை கேட்டு அதிர்ச்சி அடைய, எங்கே இருக்கீங்க என கேட்கிறார். நாங்க மதுரையில் இருப்பதாக முல்லை சொல்ல, ஜீவாவிடம் விவரத்தை கேட்கிறார். பின் சண்டை போட வந்தவர்களிடம் போட்டி நடத்துபவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். பின் அவர்கள் பிரச்சனை செய்யாமல் கிளம்பி செல்கின்றனர். அப்போது கதிர் யார் போன் பேசினா என கேட்க ஜீவா மாமா தான் என முல்லை சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த பிரச்சனை எல்லாம் சொல்லாதே என சொல்ல, முல்லை நான் சொல்லவில்லை என சொல்கிறார். பின் இருவரும் உள்ளே செல்கின்றனர். வேகமாக வீட்டிற்கு வந்த ஜீவா, மூர்த்தியிடம் கதிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறார். என்னாச்சு என மூர்த்தி கேட்க, கதிருக்கு பிரச்சனை என சொல்கிறார். என்னாச்சுடா என மூர்த்தி அதிர்ச்சியாகி கேட்க ஜீவா முல்லை சொன்ன விவரத்தை சொல்கிறார். அதை கேட்டு மூர்த்தி ஷாக் ஆகிறார். உடனே நாம கிளம்ப வேண்டும் கதிருக்கு எதுவும் ஆக கூடாது என மூர்த்தி சத்தம் போட்டு கிளம்புகிறார். தனம் கதிர் முல்லை பத்திரமாக வர வேண்டும் என சொல்ல, மூர்த்தி ஜீவாவும் கிளம்புகின்றனர்.
ரேஷன் கார்டு கேட்டு வீட்டிற்கு வரும் கோபி.. முடியாது என சொல்லும் பாக்கியா – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
மறுபக்கம் போட்டி மீண்டும் நடக்கிறது. அதில் கணவன் பற்றிய கேள்விகளுக்கு மனைவியும், மனைவி பற்றிய கேள்விகளுக்கு கணவனும் சரியான பதில் சொல்ல வேண்டும். முதலில் வந்தவர்கள் 10க்கு 8 கேள்விகளுக்கு சரியான பதில் சொல்கின்றனர். அடுத்து கதிரும் முல்லையும் வர அவர்கள் 10க்கு 10 வாங்கி இந்த போட்டியிலும் வெற்றி பெறுகின்றனர். அதனால் எதிர் டீம்மில் இருப்பவர் கோவித்து கொள்கிறார். பின் கதிரும் முல்லையும் வெளியே வர கதிரை அடிக்க ஆட்களை கூட்டிக் கொண்டு வருகிறார். மறுபக்கம் மூர்த்தியும் ஜீவாவும் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஆட்கள் கதிரை அடிக்க, அவரும் பதிலுக்கு அடிக்கின்றனர். பின் கதிரை ஒரு ரவுடி கத்தியால் குத்த வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.