விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ஸ்ருதிகா போட்டியாளர்களுக்காக செய்த காரியம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி முந்தைய சீசன்களை போலவே அதிக எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்டது. தற்போது குக் வித் கோமாளி 3 ல் கலந்து கொள்பவர்களுக்காக நடிகை சுருதிகா செய்த விஷயம் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ஸ்ருதிகா:
வெள்ளித்திரை நட்சத்திர பட்டாளத்தை வரிசையாக சின்னத்திரைக்கு இறக்குமதி செய்து வரும் விஜய் டிவி தற்போது அடுத்த செட் நட்சத்திரங்களை நோக்கி குறி வைத்துள்ளது. அந்த வரிசையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். கடந்த 2 சீசன்களாக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் விடுமுறை!
தொடர்ந்து 10 குக்குகளும், 10 கோமாளிகளும் அறிமுக செய்யப்பட்டனர். போட்டியாளர்களாக ரோஷினி, சுருதிகா, வித்யூ லேகா, மனோ பாலா போன்றவர்கள் வந்திருந்தனர். கோமாளிகளாக முன்னர் இருந்த ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி போன்றவர்களும், புதிதாக சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் போன்றவர்களும் வந்துள்ளனர். அதிக எதிர்பார்ப்போடு ஆரம்பித்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக தான் சென்றது. ஆனால் அதிலும் ஒரு சர்ச்சையை பார்வையாளர்கள் கிளப்பி உள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
கோமாளிகளை நடுவர்கள் அடிப்பது போல் வரும் காட்சிகள் மிகவும் எதிர்வினையாக கருத்துக்களை பெற்றது. ஆனால் அவை அனைத்தும் நிகழ்ச்சிக்காக மட்டும் தான் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது நடிகை சுருதிகா குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் உள்ள அனைவருக்கும் இரவு விருந்து அளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.