தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டது. அதனால் அரசு குறிப்பிட்ட ஊக்கத்தொகையை வழங்க உள்ளது.
ஊக்கத்தொகை
தமிழகத்தில் தை பொங்கல் தின விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த தொகுப்பு தமிழகத்தில் சுமார் 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்க திட்டமிட்டது.
பிப்.21 முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் விளக்க அறிவிப்பு!
இந்த பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதல் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பரிசு தொகுப்பில் உள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவற்றை ரேஷன் கடை ஊழியர்கள் பாக்கெட் செய்ததாகவும் அத்துடன் ஒவ்வொரு பொருளையும் சரிபார்த்து வழங்கியதாகவும் கூறினார்கள். இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டது. அதனால் கடை ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஒட்டுமொத்த குடும்பத்திற்கு ஒரே மொபைல் நம்பரில் ஆதார் கார்டு எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆனால் இது குறித்து அரசு ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள சில பொருட்கள் தரமற்றதாகவும் எடை குறைவானதாகவும் இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இருப்பினும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு கார்டுக்கு தலா 50 காசு வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை. மேலும் இது குறித்து ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது, லாரிகள் மூலமாக அனுப்பப்பட்ட கரும்பை இறக்கி வைக்கும் கூலியை தங்கள் பணத்தை கொண்டு தந்தனர். அதனால் தங்களுக்கு ஒரு கார்டுக்கு தலா ரூ.5 வரை ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.