ஜனனி தமிழ் புரியவில்லை என சொன்ன விக்ரமன்.. தொடரப்பட்ட வழக்கு – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஏழாவது வாரத்தில் தற்போது நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இன்றைய எபிசோடில் விக்ரமன் ஜனனியின் தமிழ் பற்றி சொன்னது வழக்காக நடைபெற்றுள்ளது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 45 நாட்களை கடந்துவிட்டது. இந்த வார தலைவராக மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரம் தனலட்சுமி, அசிம், ராம், மணிகண்டா, அமுதவாணன், கதிரவன், ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் இந்த வாரம் எலிமினேட் செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. என்ன நடக்க இருக்கிறது என்பதை வார இறுதி நாட்களில் தான் தெரிய வரும்
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் இது வரை நடந்த சண்டைகளுக்கு வழக்கு தொடரப்பட்டு அதில் நீதிபதி தீர்ப்பு சொல்வார். தற்போது வெளியான ப்ரோமோவில் ஜனனியின் தமிழ் புரியவில்லை என விக்ரமன் சொன்னது வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஜனனி தரப்பில் அசிம் மற்றும் விக்ரமன் தரப்பில் குயின்சி வாதாடுகின்றனர். இதில் ஜனனி தலையில் பிரச்சனை என விக்ரமன் சொன்னது வேதனை அளிப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் தற்போது எப்படி உள்ளார்? மருத்துவர்களின் அறிவுரை இதுதான்!
Exams Daily Mobile App Download
உடனே குயின்சி உங்கள் மொழியில் பிரச்சனை இருக்கிறதா என கேட்டதாக சொல்கிறார். பின் பேசிய விக்ரமன் அவங்க மொழியில் பிரச்சனை இல்லை, அவங்க செந்தமிழ் பேசுவது எனக்கு தடுமாற்றமாக இருப்பதாக விக்ரமன் சொல்கிறார். உடனே ஜனனி உங்க தமிழ் என சொல்வது எனக்கு வருத்தமளிப்பதாக சொல்கிறார். பின் குயின்சி எத்தனை முறை கத்தி சொன்னாலும் அது டாஸ்க் மட்டும் தான் என சொல்கிறார். இதில் நீதிபதியாக இருக்கும் மணி என்ன தீர்ப்பு கொடுப்பார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.