சென்னையில் இருந்து கோவைக்கு 6மணி நேரத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் – ஆர்வத்துடன் பயணிகள்!

0
சென்னையில் இருந்து கோவைக்கு 6மணி நேரத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் - ஆர்வத்துடன் பயணிகள்!
சென்னையில் இருந்து கோவைக்கு 6மணி நேரத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் - ஆர்வத்துடன் பயணிகள்!
சென்னையில் இருந்து கோவைக்கு 6மணி நேரத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் – ஆர்வத்துடன் பயணிகள்!

இந்தியாவில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில், சென்னை கோவை இடையே அடுத்த மாதம் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்ய வெறும் 6 மணி நேரம் தான் ஆகும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்

இந்தியாவில் தற்போது 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவில் முதன் முறையாக சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை கோவை இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்த புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் 8 ஆம் தேதி தமிழகம் வந்து திறந்து வைக்கிறார். மேலும் இந்த ரயில் தூரம் குறித்தும், அதற்கு ஆகும் நேரம் குறித்தும் விவரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

தமிழக மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் – ஏப்.25 & 27ம் தேதி தேர்வு..!

அதன் படி வந்தே பாரத் ரயில் கோவை – சென்னை இடையே உள்ள 495.28 கி.மீ தூரத்தை 6 மணிநேரம் 10 நிமிடங்களில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதியம் 12.10க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் எனவும், அதன் பின் மதியம் 2.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் 8.30 மணிக்கு கோவைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் இயங்கும் எனவும் கோவை – சென்னை வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் எனவும், மொத்தம் 8 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் அதிவேக ரயிலாக இருப்பதால் பயணிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!