கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி? மருத்துவர்கள் விளக்கம்!
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி:
நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்து வரும் நிலையில் தடுப்பூசி பணிகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனை தருகிறது என்பதனை உறுதி செய்த பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை முதன்மை ஆக்க வேண்டும். அதிக பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இன்று மீண்டும் தடுப்பூசி பணிகள் தொடக்கம் – 2ம் தவணைக்கு முன்னுரிமை!!
டெல்டா வகை தொற்று பரவும் பகுதி மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கும் கால இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாம் டோஸ் செலுத்த 12 வாரங்கள் கால இடைவெளி நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் இதனை குறைக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.