தமிழகத்தில் இன்று மீண்டும் தடுப்பூசி பணிகள் தொடக்கம் – 2ம் தவணைக்கு முன்னுரிமை!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மீண்டும் இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழி என்று அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
LPG வீட்டு உபயோக சிலிண்டர் மானியம் – அறிந்து கொள்ளும் வழிமுறைகள்!!
இதனால் அதிக அளவிலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வமுடன் இருக்கின்றனர். தடுப்பூசி உற்பத்தி குறைபாடு காரணமாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கான பற்றாக்குறை நிலவி வருகிறது. போதிய அளவிலான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், மதுரை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மட்டுமே தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பற்றாக்குறையான நிலை நீடிப்பதால் கோவாக்ஸின் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.