12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி – அவசர கால அனுமதி வழங்க கோரிக்கை!
பெங்களூருவை சேர்ந்த ஜைடல் கெடிலா மருந்து நிறுவனம் 12-18 வயதுடையவர்களுக்காக ஜைக்கோவ்-டி என்னும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. தற்போது இதை அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக மக்களுக்கு வழங்க தற்போது வரை 4 தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது இதனை தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த ஜைடல் கெடிலா மருந்து நிறுவனம் தனது கண்டுபிடிப்பான ஜைக்கோவ்-டி தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்காக பயன்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் – மத்திய அரசு கடிதம்!
தற்போது இந்த தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த தடுப்பூசி 12-18 வயது உடையவர்களுக்கு போடப்படும். தற்போது இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2வது தடுப்பூசி என்ற பெருமை இந்த தடுப்பூசிக்கு சேரும். இந்த தடுப்பூசியானது 3 டோஸ்களை கொண்டது. முதல் டோஸ் செலுத்திய 28 நாட்களில் 2வது டோஸும், 56வது நாளில் 3வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தடுப்பூசியானது மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் தனித்தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது. காரணம் இந்த தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளை போல் ஊசி மூலம் செலுத்தப்படாமல் தோல் பகுதியில் ஹைபோதெர்மிக் நீடில் மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படுபவையாகும். இந்த தடுப்பூசியானது மத்திய அரசின் உயிர் தொழில்நுட்ப துறையின் கீழ் வரும் ஆராய்ச்சி குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.