கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் – மத்திய அரசு கடிதம்!
நாடு முழுவதும் ஜூன் 21 முதல் 27 ஆம் தேதி வரை கொரோனா நோய்த்தொற்று விகிதம் 10 சதவிகிதத்திற்கு அதிகமாக பதிவான மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் விளைவாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் – வருமானம் பாதிப்பு!
இதனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு ராஜஸ்தான், மணிப்பூர், சிங்கப்பூர், திரிபுரா, மேற்கு வங்கம், புதுவை, ஒடிஸா, மேகாலயம், மிஸோரம், நாகலாந்து, கேரளம், அருணாச்சல பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், அஸ்ஸாம், ஆகிய 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஜூன் 21 முதல் 27 வரை கொரோனா பாதிப்பு 10 சதவிகிதத்திற்கு அதிகமாக பதிவான மாவட்டங்களில் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்படும் போது கவனமாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவே குறைந்துள்ளது. மேலும் ஜூன் 21 முதல் 27 வரை பாலக்காடு, கொல்லம், மலப்புரம், புதுவையில் மாஹே ஆகிய இடங்களில் 10 சதவிகிதத்திற்கு அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் 14 நாட்களுக்கு அமல்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.