செப்.21 காலை 6 மணி முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் மத திருவிழா காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநில அரசு நாளை காலை முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீடித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவலை தடுக்கும் நோக்கில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் தினசரி 4 லட்சம் வரை பதிவாகி வந்த கொரோனா புதிய பாதிப்புகள் தற்போது 40 ஆயிரமாக குறைந்துள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் உத்தரகாண்ட் மாநில அரசும் ஊரடங்கை நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1,661 பேருக்கு கொரோனா உறுதி; பலி எண்ணிக்கை 23 பேர் -சுகாதாரத்துறை அறிக்கை!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நிலைமையை ஆய்வு செய்த பிறகு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சர்த்கம் யாத்திரை நடத்த அம்மாநில உயர் நீதிமன்றம் முன்னதாக அனுமதி அளித்தது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரித்வாருக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட வில்லை.
TN Job “FB Group” Join Now
இதனால் உத்ரகாண்ட்ல் அங்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு முன்னர் விதித்திருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும், இரண்டு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 21ம் தேதியான நாளை காலை 6 மணி முதல் அக்டோபர் 5ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.