தமிழகத்தில் இன்று 1,661 பேருக்கு கொரோனா உறுதி; பலி எண்ணிக்கை 23 பேர் -சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் இன்று மட்டும் 1,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், 23 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தை பொறுத்தவரை 2ம் அலை பாதிப்பு முடிந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள மக்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது 3ம் அலை பாதிப்புகள் இந்தியாவில் தொடங்கிவிட்டதாக மத்திய சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், தமிழகத்திலும் பாதிப்புகள் மெல்ல மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்றைய தொற்று பாதிப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ரக்ஷா – அதுவும் இந்த சேனலில்!
அதன்படி, இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,661 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,47,041ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் 23 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 35,360ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்பில் இருந்து 1,623பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25,94,697 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,52,493 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 206 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 164 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.