Aadhar New Update: கைரேகை பதிவு முறையில் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் – UIDAI அறிவிப்பு!

0
Aadhar New Update: கைரேகை பதிவு முறையில் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் - UIDAI அறிவிப்பு!
Aadhar New Update: கைரேகை பதிவு முறையில் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் - UIDAI அறிவிப்பு!
Aadhar New Update: கைரேகை பதிவு முறையில் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் – UIDAI அறிவிப்பு!

தற்போது நாட்டில் ஆதார் எண்ணை பயன்படுத்தி சுலபமாக முறைகேடுகள் நடந்து வருகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கைரேகை பதிவு முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

கைரேகை பதிவு முறை

நாட்டில் தனிநபருக்கு ஆதார் என்பது தனித்துவ அடையாள ஆவணமாக விளங்குகிறது. தற்போது ஆதாரின் கைரேகை பதிவு முறையில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இதனை தடுக்கும் விதமாக ஆதார் கைரேகை பதிவு முறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (AI/ML) அடிப்படையில் “Finger minutia மற்றும் Finger image என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக UIDAI அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சூப்பர் திட்டங்கள் – மக்களை சென்றடைய அரசு நடவடிக்கை!

இந்த தொழில்நுட்பம் மூலமாக போலி கைரேகைகளை சுலபமாக கண்டறியலாம். அத்துடன் உண்மையான கைரேகைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அடுக்கு தொழில்நுட்ப அம்சம் மூலமாக நிதி பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆதார் அங்கீகார பரிவர்த்தனைகள் சுமார் 88 பில்லியனை தாண்டியுள்ளதாகவும், இதில் நாளொன்றுக்கு 70 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஆதார் கைரேகை பதிவு மூலமாக பரிவர்த்தனைகள் மேற்கொண்டுள்ளனர் என UIDAI குறிப்பிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!